sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த சிறுபாலம் சீரமைக்க கடல்மங்கலத்தினர் வலியுறுத்தல்

/

சேதமடைந்த சிறுபாலம் சீரமைக்க கடல்மங்கலத்தினர் வலியுறுத்தல்

சேதமடைந்த சிறுபாலம் சீரமைக்க கடல்மங்கலத்தினர் வலியுறுத்தல்

சேதமடைந்த சிறுபாலம் சீரமைக்க கடல்மங்கலத்தினர் வலியுறுத்தல்


ADDED : ஆக 05, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில், 30க்கும், மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவில் குறுக்கே, மழைநீர் வெளியேறும் வகையில், 10 ஆண்டுகளுக்கு முன், மழைநீர் வடிகால்வாயுடன் இணையும் வகையில், சிறுபாலம் கட்டப்பட்டது.

இந்நிலையில், இரு மாதத்திற்கு முன், கட்டுமான பொருட்களுடன் இவ்வழியாக கனரக வாகனம் சென்றபோது, சிறுபாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்து உடைந்து விட்டதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இதனால், இவ்வழியாக இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சிறுபாலம் சேதமடைந்த பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, சேதமடைந்த சிறுபாலத்தை இடித்துவிட்டு, புதிதாக சிறுபாலம் அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us