/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
/
காஞ்சி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
காஞ்சி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
காஞ்சி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
ADDED : ஏப் 17, 2024 10:04 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரிக்கிருஷ்ணன் என்பவர், உணவகம் நடத்தி வருகிறார். இவர், 2020ம் ஆண்டு, 'கொரோனா' தொற்று பரவல் சமயத்தில், குன்றத்துார் மற்றும் வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.
உணவுக்கான செலவினதொகை, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை, மாவட்ட நிர்வாகத்திடம், மூன்று ஆண்டுகளாக கேட்டு வந்தார். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்து வழங்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சிவில் சூட் ஆக வழக்கு தொடர அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவில் சூட் ஆக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, மாவட்ட நீதிபதி செம்மல், வழக்கு தொடர்ந்த அரிக்கிருஷ்ணனுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க உத்தரவிட்டார். இருப்பினும் நிதி வழங்காததால், ஜப்தி செய்வதற்கான நிறைவேற்ற மனுவை தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி செம்மல், காஞ்சி புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கார், டேபிள், நாற்காலி ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற அமீனாக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்றுமுன்தினம் மதியம் வந்தனர்.
அப்போது, கலெக்டரின் கார், நாற்காலி போன்றவற்றை ஜப்தி செய்யப் போவதாக அறிவித்தனர். அப்போது கலெக்டர் கலைச்செல்வி அங்கு இல்லாததால், கலெக்டர் அலுவலக வருவாய் துறை அதிகாரிகள் நீதிமன்றஅமீனாக்களிடம் இதுகுறித்து சமாதானம்செய்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி, உணவக உரிமையாளருக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, நீதிமன்ற அமீனாக்கள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து சென்றனர்.

