/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி குமரக்கோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.18 லட்சம்
/
காஞ்சி குமரக்கோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.18 லட்சம்
காஞ்சி குமரக்கோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.18 லட்சம்
காஞ்சி குமரக்கோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.18 லட்சம்
ADDED : ஆக 08, 2024 11:11 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, கோவில் செயல் அலுவலர் கதிரவன் மற்றும் காஞ்சியில் உள்ள கோவில் செயல் அலுவலர் கள், ஹிந்து சமய அற நிலையத்துறை காஞ்சி புரம் சரக ஆய்வாளர்திலவகதி உள்ளிட்டோர் முன்னிலையில் கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள், தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டது.
இதில், 18 லட்சத்து, 1,455 ரூபாய் ரொக்கமும், 31.5 கிராம் தங்கமும், 1,020 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாகக் கிடைத்தது.