/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி வரதர் சேஷ வாகனத்தில் உலா
/
காஞ்சி வரதர் சேஷ வாகனத்தில் உலா
ADDED : மே 23, 2024 11:10 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலையில் தங்க சப்பரத்திலும், மாலை, சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார்.
இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 21ம் தேதி காலையில், ஹம்ஸ வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார்.
மூன்றாம் நாள் பிரபல உற்சவமான நேற்று முன்தினம் காலை கருடசேவை உற்சவமும், மாலை ஹனுமந்த வாகன உற்சவமும் நடந்தது.
இதில், நான்காம் நாள் உற்சவமான நேற்று காலை சேஷ வாகன உற்சவம் நடந்தது. இதில், அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள், பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். மாலை சந்திர பிரபை உற்சவம் நடந்தது.
ஏழாம் நாள் உற்சவமான நாளை மறுநாள் தேரோட்டமும், 28ம் தேதி காலை, அனந்தசரஸ் தெப்பகுளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.