/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி யூத் பிரீமியர் லீக்: வாரியர்ஸ் அணி வெற்றி
/
காஞ்சி யூத் பிரீமியர் லீக்: வாரியர்ஸ் அணி வெற்றி
ADDED : மார் 03, 2025 12:21 AM

காஞ்சிபுரம், காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் தொடர், காஞ்சிபுரத்தில், கடந்த மாதம் துவங்கி, லீக் முறையில் நடந்தது. இப்போட்டியில் 5 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டிக்கு, பாரிஸ் காஸ்மடிக்ஸ் காஞ்சி ராயல்ஸ் அணியும், திரிபில் ஸ்டார் ஆன்லைன் சர்வீஸ் காஞ்சி வாரியர்ஸ் அணியும் தேர்வாகி, இரு அணியும் நேற்று மோதின. இதில் காஞ்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய வாரியர்ஸ் அணி 25 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
பின் ஆடிய ராயல்ஸ் அணி, 25 ஓவரில், 120 ரன்கள் மட்டுமே எடுத்ததால், காஞ்சி வாரியர்ஸ் அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக வாரியஸ் அணியின் ஸ்ரீகிருஷ்ணாவும், தொடர் நாயகனாக வாரியர்ஸ் அணியின் ஹேமேஷ் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர், மேலும் தொடரில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கபட்டன.
இத்தொடர் வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது போல தொடர்ந்து இளைஞர்களுக்கு பயனுள்ள தொடர்கள், தொடர்ந்து நடத்தபட உள்ளது என, காஞ்சி கிரிக்கெட் அகாடமி தலைமை பயிற்சியாளர் வினோத்குமார் தெரிவித்தார்.