sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு நுாலக வசதியுடன் இம்மாதம் திறப்பு

/

கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு நுாலக வசதியுடன் இம்மாதம் திறப்பு

கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு நுாலக வசதியுடன் இம்மாதம் திறப்பு

கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு நுாலக வசதியுடன் இம்மாதம் திறப்பு


ADDED : ஜூலை 22, 2024 01:27 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னையின் மைய பகுதியில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வனங்கள் உள்ளன.

ஒன்பது வகையான, 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான 314 பறவை இனங்கள் உள்ளன.

சென்னை மக்கள் மற்றும் சுற்றுலா வருவோர், இந்த பூங்காவில் உலவும் உயிரினங்களை கண்டு ரசிப்பர்.

இந்நிலையில், இந்த பூங்காவை மேம்படுத்த, கடந்த ஆண்டு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அரசு ஒதுக்கிய 20 கோடி ரூபாய் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சி.எஸ்.ஐ.ஆர்., நிதி 10 கோடி ரூபாய் என ,மொத்தம் 30 கோடி ரூபாயில் பணி துவங்கியது. அனைத்து பணிகளும் முடிந்து, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு இப்பூங்கா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கிண்டி சிறுவர் பூங்காவில் ஒரு நுாலகம் கட்டப்படுகிறது. இங்கு, வன உயிரினங்கள், பொது அறிவு மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன.

'வன உயிரினங்கள் குறித்து படித்து விட்டு, அதை நேரில் பார்க்கும்போது புதுமையான அனுபவம் கிடைக்கும்' என்றனர்.

என்னென்னவசதிகள்?

பூங்காவில் அகலம் 7 அடியில் 2 கி.மீ., துாரம் நடைபாதை; 1 கி.மீ., துாரம் மழைநீர் வடிகால், நீர்வீழ்ச்சி, செல்பி பாயின்ட், விளையாட்டு உபகரணங்கள், இரு உணவகங்கள்.மூன்று கழிப்பறைகள், வன உயிரின சிகிச்சை மையம், யானை சிற்பம், மின் விளக்குகள், தண்ணீர் தொட்டிகள், டிஜிட்டல் பெயர் பலகை, கேமரா.பறவைகள் வாழ்விடத்திற்கான மரங்கள், வேடந்தாங்கல் போல் பறவை கூண்டு உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.








      Dinamalar
      Follow us