/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விநாயகர், அம்மன் கோவிலில் 30ல் கும்பாபிஷேகம்
/
விநாயகர், அம்மன் கோவிலில் 30ல் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 27, 2024 11:27 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில், செல்வ விநாயகர், ரேணுகா தேவி அம்மன் கோவில்கள் உள்ளன. 150 ஆண்டுகள் பழமையான இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009ல் நடந்தது.
இதையடுத்து,இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, பல்வேறு திருப்பணிகளுடன் கோவில் ராஜகோபுரம் மற்றும் பிற சன்னிதிகளுக்கு வர்ணம் தீட்டும் பணி சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி நாளை, காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை, பூர்ணாஹூதியும், மாலை 6:00 மணிக்கு வாஸ்து ஹோமம், முதற்கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடக்கிறது.
வரும் 30ம் தேதி, காலை 9:30 மணிக்கு, செல்வ விநாயகர், ரேணுகாம்பாள் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.