sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

/

காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : மார் 25, 2024 05:32 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பல்லவர்மேடு மஹா தீப்பாஞ்சியம்மன் கோவில் மற்றும் குருவிமலையில் 21 அடி உயர ஆஞ்சநேயருக்கு நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் பல்லவர்மேடு, வ.உ.சி., தெருவில், மஹா தீப்பாஞ்சியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் சமீபத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று, காலை 7:30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட பம்பை, உடுக்கை, காவடி கைச்சிலம்பாட்ட கலைஞர்கள் சங்க தலைவர் வடிவேல் தலைமையில், மூலவர் அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.

இதில் கோவில் நிர்வாகிகள் சங்கர் சுவாமிகள், யோகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய தீப்பாஞ்சியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.

21 அடி ஆஞ்சநேயருக்கு...


காஞ்சிபுரம் அடுத்த, குருவிமலை கிராமத்தில் புதிதாக 21 அடி உயர ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன.

நேற்று, காலை 11:30 மணிக்கு, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில்,குருவிமலை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us