ADDED : மே 07, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி : சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஏழு நாட்களில், 31 குற்றவாளிகளை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். 454 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.