sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

‛உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஸ்ரீபெரும்புதுார் கலெக்டர் ஆய்வு

/

‛உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஸ்ரீபெரும்புதுார் கலெக்டர் ஆய்வு

‛உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஸ்ரீபெரும்புதுார் கலெக்டர் ஆய்வு

‛உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஸ்ரீபெரும்புதுார் கலெக்டர் ஆய்வு


ADDED : ஆக 22, 2024 01:10 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:'உங்களை தேடி; உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், தாலுகா அளவில் தங்கி, அன்றைய தினம் முழுதும் மாவட்ட கலெக்டர் பல்வேறு அரசு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்தார்.

ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கை பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன்பின், ஸ்ரீபெரும்புதுார் மகளிர் காவல் நிலையம், அறிஞர் அண்ணா அரசு மருத்துமனை, வேளாண்மை துறை விதை கிடங்கு, வேளாண்மை விரிவாக்க மையம், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பின், ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மூன்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து, இன்று காலை 9:00 மணி வரை ஆய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us