sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மஹாசுவாமிகள் மணிமண்டபத்தில் ஆடிப்பெருக்கு உற்சவம் விமரிசை

/

மஹாசுவாமிகள் மணிமண்டபத்தில் ஆடிப்பெருக்கு உற்சவம் விமரிசை

மஹாசுவாமிகள் மணிமண்டபத்தில் ஆடிப்பெருக்கு உற்சவம் விமரிசை

மஹாசுவாமிகள் மணிமண்டபத்தில் ஆடிப்பெருக்கு உற்சவம் விமரிசை


ADDED : ஆக 03, 2024 01:12 AM

Google News

ADDED : ஆக 03, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், தமிழகத்தின் புனித காவிரி ஆற்றுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

தென்னிந்திய பாரம்பரியத்தின்படி, ஒருவர் காவிரி ஆற்றின் கரையில் வசிக்காவிட்டாலும், அருகில் உள்ள குளம், கோவில் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று, அதில் உள்ள தெய்வீக நதியை ஆராதனை செய்து பூஜை செய்யலாம்.

காவிரி அஷ்டோத்ரம் அல்லது லக்ஷ்மி அஷ்டோத்ரம் அர்ச்சனையை தொடர்ந்து ஷோடசோபசாரம், நைவேத்யம் மற்றும் தீபாராதனை செய்யலாம். அதன்படி, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பண்டிதர்கள் ஆண்டுதோறும் ஸ்ரீமடம் முகாமில் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர்.

நேற்று அதிகாலை காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுக்கிரஹத்துடன், ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டபத்தை ஒட்டியுள்ள பாலாற்றுக்கு பக்தர்களுடன் சென்ற பண்டிதர்கள், காவிரி பூஜை செய்தனர்.

புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் ஸ்ரீமடம் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கப்பட்டது. விழாவில், சிறப்பு நைவேத்ய பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us