/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் மரக்கன்று நடும் விழா
/
மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூலை 06, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இதில், காஞ்சி அன்ன சத்திரம், பசுமை இந்தியா அறக்கட்டளை, இன்னர் வீல் கிளப் ஆப் காஞ்சிபுரம் சார்பில் நடந்த இவ்விழாவில், புங்கை, நாவல், அத்தி, அரசு, வேம்பு, மா, நீர்மருது, மலைவேம்பு, இலுப்பை, செவ்வரளி, குல்மார்க் உள்ளிட்ட நிழல், கனி, மலர் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், ஆடு, மாடுகள், மரக்கன்றுகளை மேயாமல் இருக்க பாதுகாப்பு கூண்டு வலை அமைக்கப்பட்டது.