sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இரும்பு கழிவுகள் பயன்படுத்தி மாதிரி கடற்கரை கோவில்

/

இரும்பு கழிவுகள் பயன்படுத்தி மாதிரி கடற்கரை கோவில்

இரும்பு கழிவுகள் பயன்படுத்தி மாதிரி கடற்கரை கோவில்

இரும்பு கழிவுகள் பயன்படுத்தி மாதிரி கடற்கரை கோவில்


ADDED : ஏப் 26, 2024 11:13 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், இரும்பு தகடு, கம்பி உள்ளிட்ட கழிவுகளைப் பயன்படுத்தி, கடற்கரை கோவில் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

'ஹேண்ட் இன் ஹேண்ட்' என்ற தன்னார்வ நிறுவனம், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாக பகுதிகளில், மட்கும் மற்றும் மட்காத குப்பையை சேகரித்து, திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தி வருகிறது. பொருட்கள் மறுசுழற்சி குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மாமல்லபுரத்தில் நீண்டகாலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திய இந்நிறுவனம், இரும்பு கழிவுப் பொருட்களில் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை உருவாக்கி, கடற்கரை கோவில் நுழைவாயிலில் பயணியர் பார்வைக்கு வைத்துள்ளது.

இதுகுறித்து, நிறுவனத்தினர் கூறியதாவது:

இரும்பு தகடுகள், கம்பிகளின் கழிவுகளை பயன்படுத்தி, கழிவுப்பொருளில் கலை என்ற நோக்கத்துடன், கடற்கரை கோவில் மாதிரியை உருவாக்கினோம்.

கழிவில் கலை பற்றி பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று, கடற்கரை கோவில் நுழைவாயிலில் காட்சிக்கு வைத்துள்ளோம்.

இரும்பு கழிவுகளில் செய்தது, அதற்காக பயன்படுத்திய பொருட்கள், எடை விபரங்கள் குறித்து தகவல் பலகையும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us