sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் சிதறிய ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

சாலையில் சிதறிய ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் சிதறிய ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் சிதறிய ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : மார் 03, 2025 12:22 AM

Google News

ADDED : மார் 03, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, பாலுார் -- காஞ்சிபுரம் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை உள்ளது.

ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. நாளொன்றுக்கு 1,000க்கும் மேற்பட்ட லாரிகள், ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு இந்த சாலையில் சென்று வருகின்றன.

இந்த நிலையில், தார்ப்பாய் மூடாமலும், அளவுக்கு அதிகமாகவும் ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து விழும் கற்கள் சாலை முழுதும் சிதறி உள்ளன.

இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குவிந்துள்ள ஜல்லி கற்களின் மீது செல்லும் போது, இடறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, தார்ப்பாய் போட்டு மூடாமலும், அளவுக்கு அதிகமாகவும், ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சாலையில் சிதறியுள்ள ஜல்லி குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us