sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிக்னலில் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

/

சிக்னலில் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சிக்னலில் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சிக்னலில் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


ADDED : மார் 03, 2025 12:39 AM

Google News

ADDED : மார் 03, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் அனைத்து சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களைவிட, இரட்டை மண்டபம் சிக்னலில் மட்டுமே வாகன ஓட்டிகள், 120 வினாடிகள் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகளின் நலன் கருதி, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் உத்தரவின்படி, கடந்த ஆண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே, போக்குவரத்து போலீசார் சார்பில், இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டது.

இதனால், வெயிலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பசுமை நிழற்பந்தல் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில், சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலில் நடமாடுவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, கடந்த ஆண்டைப்போல, நடப்பாண்டும் இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்க, காஞ்சிபுரம் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us