sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூன் 22, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில்இருந்து, காமாட்சியம்மன் நெசவாளர் குடியிருப்பு காலனிக்கு செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின்குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் நிறைந்த இந்த பாலத்தின் இருபக்கங்களிலும் உள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர், ஆறு ஆண்டுகளுக்கு முன் பலத்த மழையின்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்புச்சுவர் இடிந்துவிட்டது.

சிறுபாலத்திற்கு மீண்டும் தடுப்புச்சுவர் அமைக்கவில்லை. மின்விளக்கு வசதி இல்லாத இப்பகுதியில், இரவு நேரத்தில் சிறுபாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

எனவே, காமாட்சியம்மன் நெசவாளர் குடியிருப்பு காலனியில், வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கவும், பாலம் அருகில் மின்விளக்கு அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us