sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிவாக்கத்தில் தடுப்பு இல்லாத வளைவு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

காஞ்சிவாக்கத்தில் தடுப்பு இல்லாத வளைவு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிவாக்கத்தில் தடுப்பு இல்லாத வளைவு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிவாக்கத்தில் தடுப்பு இல்லாத வளைவு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : மே 30, 2024 12:01 AM

Google News

ADDED : மே 30, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அடுத்த, செரப்பணஞ்சேரியில் இருந்து, காஞ்சிவாக்கம் சாலை பிரதானமாக பிரிந்து செல்கிறது. சுற்றுவட்டார பகுதியினர், படப்பை, ஒரகடம், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்களில் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த முக்கிய சாலையில், பெரும்பகுதிகளில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால், இரவில் கும்மிருட்டாக மாறி, வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர்.

மேலும், இந்த சாலையில், நாவலுார் அருகே, மூன்று இடங்களில் சாலை வளைந்து செல்கின்றன. தடுப்பு இல்லாத வளைவில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அசுர வளைவில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள வளைவுகளில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us