sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் குன்றத்துாரில் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் குன்றத்துாரில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் குன்றத்துாரில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் குன்றத்துாரில் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மார் 08, 2025 12:48 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை --- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் நான்கு சாலை சந்திப்பில் இருந்து, குன்றத்துார் செல்லும் சாலையில் தினமும் ஏராளனமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பட்டுநுால்சத்திரம் பகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஏராளமான வணிக கடைகள் உள்ளன.

போக்குவரத்து மிகுதியான இந்த சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறன. இதனால், அப்பகுதியில் நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது.

இதையடுத்து, போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை வைத்தனர்.

ஆனால், இதை பொருட்படுத்தாமல், வட்டார போக்குவரத்து அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருபவர்கள், தங்களின் வாகனங்களை நோ பார்க்கிங்கில் விதிமீறி நிறுத்துகின்றனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்கும் வகையில், நோ பார்க்கிங்கில் விதிமீறி நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது, ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us