/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை எரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
/
குப்பை எரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 08, 2024 04:59 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் இருந்து, சின்ன காஞ்சிபுரம் செல்லும் வழியில் அல்லாபாத் ஏரி உள்ளது.
இப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் ஏரிக்கரையை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். குவியலாக கிடக்கும் குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை.
இந்நிலையில், ஏரிக்கரையில் குவியலாக கிடந்த குப்பைக்கு மர்ம நபர்கள் நேற்று காலை தீ வைத்துள்ளனர். இதனால், கொழுந்து விட்டு எரிந்த தீயால், சாலையில் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதனால், இவ்வழியாக சென்ற பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
எனவே, அல்லாபாத் ஏரிக்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

