sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி - செங்கை நெடுஞ்சாலையில் இருட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

/

காஞ்சி - செங்கை நெடுஞ்சாலையில் இருட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சி - செங்கை நெடுஞ்சாலையில் இருட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சி - செங்கை நெடுஞ்சாலையில் இருட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூலை 07, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் இருவழிச் சாலை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, சில மாதங்களாக நடைபெறுகிறது.

வாலாஜாபாத் அடுத்த வெண்குடி, ஒட்டிவாக்கம், திம்மராஜம்பேட்டை, கருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதி சாலைகளில் இப்பணி முழுமை பெற்றுள்ளது. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் இச்சாலையில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இச்சாலை இருவழிச் சாலையாக இருந்தபோது, அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைத்து மின் வசதி ஏற்படுத்தப்பட்டு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.

ஆனால், சாலை விரிவாக்கம் செய்ததையடுத்து, சாலையோரத்தின் மற்றொருபுறம் மின் வசதி இல்லாமல் இருள் சூழ்ந்து உள்ளது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக, திம்மராஜம்பேட்டை உள்ளிட்ட அபாயகரமான வளைவு சாலைகளில் மின்வசதி இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.

எனவே, விரிவாக்கம் செய்துள்ள காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையில், புதிதாக மின்கம்பங்கள் அமைத்து, மின் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us