ADDED : ஆக 07, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, விச்சந்தாங்கலில், வேளாண் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ், மல்பெரி சாகுபடி குறித்து, நேற்று, பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சிக்கு, காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் காளியம்மாள் தலைமை வகித்தார். உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் சுமதி முன்னிலை வகித்தார்.
பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் கீர்த்தனா பட்டு புழு வளர்ப்புக்கு, மல்பெரி சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராணி சந்திரா மற்றும் சிறுகாவேரிபாக்கம் வட்டார விவசாயிகள் 40 பேர் பங்கேற்றனர்.