sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இயற்கை எரிவாயு கசிவு மணலி புதுநகரில் பீதி

/

இயற்கை எரிவாயு கசிவு மணலி புதுநகரில் பீதி

இயற்கை எரிவாயு கசிவு மணலி புதுநகரில் பீதி

இயற்கை எரிவாயு கசிவு மணலி புதுநகரில் பீதி


ADDED : செப் 07, 2024 07:05 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலிபுதுநகர் : சென்னை, மணலி புதுநகர் அடுத்த கொண்டக்கரையில், தனியாருக்குச் சொந்தமான இயற்கை எரிவாயு மையம் உள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வினியோகம் செய்வதற்காக, குழாய் வாயிலாக வெள்ளிவாயல் சாவடி, கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், மாதவரம் வழியாக மீனம்பாக்கம் வரை எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் வெள்ளிவாயில் சாவடி அருகே, கொசஸ்தலை ஆற்றின் ஓரம், இந்த எரிவாயு குழாயின் வால்வு உடைந்து, வாயு கசிந்துள்ளது.

பெரும் சத்தத்துடன் வாயு கசிந்ததால், அப்பகுதியில் புகை மூட்டமாகியது. இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள் பீதியடைந்து, மணலிபுதுநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொண்டக்கரை இயற்கை எரிவாயு தயாரிக்கும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து நிறுவன அதிகாரிகள், அந்த வழியாக செல்லக்கூடிய எரிவாயுவின் பிரதான குழாய் வால்வை மூடினர்.

இதனால், எரிவாயு வெளியேறுவது படிப்படியாக குறைந்தது.

இயற்கை எரிவாயு என்பதால், கண் எரிச்சல் போன்ற எந்த பாதிப்பும் இருக்காது எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us