sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருமுக்கூடல் கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புதிய கட்டடம்

/

திருமுக்கூடல் கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புதிய கட்டடம்

திருமுக்கூடல் கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புதிய கட்டடம்

திருமுக்கூடல் கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புதிய கட்டடம்


ADDED : செப் 09, 2024 11:32 PM

Google News

ADDED : செப் 09, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில் கிளை நுாலகம் உள்ளது. திருமுக்கூடல்,புல்லம்பாக்கம், மதூர், அருங்குன்றம் உள்ளிட்ட கிராம வாசகர்கள் இந்த நுாலகத்தில் உறுப்பினராக உள்ளனர்.

மேலும், சுற்றுவட்டார கிராம கல்லுாரி மாணவர்கள், திருமுக்கூடல் உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், இந்த நுாலகத்திற்கு வந்து கல்வி சம்பந்தமான புத்தகங்கள் பெற்றுச் செல்கின்றனர்.

இந்நிலையில், திருமுக்கூடல் கிளை நூலக கட்டடம், சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து மழை நேரங்களில் தளத்தின் வழியாக நீர் சொட்டி வருகிறது. இதனால், அச்சமயங்களில் நூலகத்தில் உள்ள புத்தகங்களை பாதுகாப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.

எனவே, இந்த நுாலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரி வந்தனர்.

இதுகுறித்து, அவ்வப்போது நம் நாளிதழில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருமுக்கூடல் கிளை நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான பணிகள் துவங்கி நடைபெறுகின்றன.






      Dinamalar
      Follow us