/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
/
சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
UPDATED : ஏப் 08, 2025 05:59 AM
ADDED : ஏப் 08, 2025 12:42 AM

வளத்தோட்டம்: காஞ்சிபுரம் ஒன்றியம், வளத்தோட்டம் கிராமத்தில் இருந்து, துாசி, மாமண்டூர் உள்ளிட்ட கிராமத்திற்கு செல்லும் சாலையில், மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே சிறுபாலம் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்வோர், இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்த சாலையில், சிறுபாலத்திற்கு இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.
தெரு மின்விளக்கு இல்லாத அப்பகுதியில் இரவு நேரத்தி இப்பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.