ADDED : மார் 07, 2025 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், செவிலியர் கண்காணிப்பாளர் தேன்மொழி என்பவர் மீது, அங்கு பணிபுரியும் செவிலியர்கள், அவர், பணியின்போது தொந்தரவு அளிப்பதாகவும், மன உளைச்சல் ஏற்படும் வகையில் பேசுவதாகவும் கூறி, மருத்துவமனையின் இணை இயக்குநரிடம் புகார் அளித்திருந்தனர்.
நடவடிக்கை இல்லாததால், செவிலியர் கண்காணிப்பாளரை கண்டித்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வாசலில், செவிலியர்கள் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.