/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் வழித்தடத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் இடையூறு
/
மின் வழித்தடத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் இடையூறு
மின் வழித்தடத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் இடையூறு
மின் வழித்தடத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் இடையூறு
ADDED : செப் 02, 2024 10:23 PM

ஸ்ரீபெரும்புதுார்: மாத்துார் ஊராட்சியில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் மின் கம்பங்கள் வழியாக மின்வழித்தடம் செல்கின்றன. இந்த மின்வழித்தடத்தில் செல்லும் மின் ஒயர் மீது, சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து படர்ந்து காணப்படுகின்றன.
இதனால், அப்பகுதியில் அடிக்கடி தெருவிளக்கு, வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பு அடிக்கடி துண்டிப்பு ஏற்படுகிறது. மேலும், மின்சாதன பொருட்கள் முறையாக பயன்படுத்த முடியவில்லை என குற்றச்சாட்டு ஏழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் வழித்தடத்தில் இடையூறாக இருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.