sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போதை நபரால் கோர விபத்து ஒருவர் பலி; மற்றொருவர் 'சீரியஸ்'

/

போதை நபரால் கோர விபத்து ஒருவர் பலி; மற்றொருவர் 'சீரியஸ்'

போதை நபரால் கோர விபத்து ஒருவர் பலி; மற்றொருவர் 'சீரியஸ்'

போதை நபரால் கோர விபத்து ஒருவர் பலி; மற்றொருவர் 'சீரியஸ்'


ADDED : மார் 03, 2025 12:36 AM

Google News

ADDED : மார் 03, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிளாம்பாக்கம், வண்டலுார் அருகே, போதை நபரின் கார் மோதிய விபத்தில், தெருவோர உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரியகரத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி, 39; கால்டாக்சி ஓட்டுநர். இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில், வண்டலுார்- -- கேளம்பாக்கம் பிரதான சாலையில், கொளப்பாக்கம் அருகே, சாலையோர உணவு கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது, கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலுார் நோக்கி வந்த இன்னோவா கார், அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே குப்புசாமி பலியானார்.

இந்த விபத்தில், கடை ஊழியர் பிரவீன், 19, படுகாயமடைந்தார்.

இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை, வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கினர்.

அப்போது, கார் ஓட்டுநர் அதீத மது போதையில் இருப்பதும், மேற்கு தாம்பரம், கோகுல் நகரைச் சேர்ந்த செல்வகுமார், 42, என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, செல்வகுமாரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விபத்தில் இறந்த குப்புசாமி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us