/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய டார்லிங் ஷோரூம் செங்கையில் திறப்பு விழா
/
புதிய டார்லிங் ஷோரூம் செங்கையில் திறப்பு விழா
ADDED : ஜூலை 22, 2024 12:35 AM

செங்கல்பட்டு : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், எலக்ட்ரானிக் பொரு ட்கள் விற்பனை செய்து வரும் டார்லிங் நிறுவனத்தின் 141வது புதிய கிளை, செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில், நேற்று காலை திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரும், டார்லிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான வெங்கடசுப்பு, புதிய கடையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், வெங்கடசுப்பு கூறியதாவது:
எங்களின், 141வது கிளையை துவக்கியுள்ளோம். எங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு காபி வாங்கும் விலையை கொடுத்தால் போதும், தவணை முறையில் விலை உயர்ந்த ஏசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்செல்லாம்.
சேவையிலும், தரத்திலும், டார்லிங் முதலிடத்தில் உள்ளது, எங்களின் தனித்தன்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு வியாபாரிகள் சங்க தலைவர் உத்திரகுமார், செயலர் துரைராஜ் மற்றும் டார்லிங் ஷோரூம் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.