sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோர மரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி

/

சாலையோர மரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி

சாலையோர மரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி

சாலையோர மரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி


ADDED : மார் 06, 2025 01:01 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழம்பி:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் - வேலுார் சாலையில், பேருந்து, லாரி, கார், வேன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

இந்த சாலைகளில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்படாமல் இருக்க, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வாயிலாக சாலையோரம் உள்ள மரங்களுக்கு வெள்ளை வர்ணம் அடிக்கும் பணி முதற்கட்டமாக காஞ்சிபுரம் --- வந்தவாசி சாலையில் நடந்தது.

தற்போது இரண்டாவது கட்டமாக, காஞ்சிபுரம் - வேலுார் சாலையில் சாலையோர மரங்களுக்கு கறுப்பு மற்றும் வெள்ளை நிற வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் இருந்து கீழம்பி சந்திப்பு வரை 4.500 கி.மீ., நீளத்திற்கு சாலையின் இரு ஓரங்களிலும் உள்ள அனைத்து வகை மரங்கள், மின் கம்பங்கள், நெடுஞ்சாலைத் துறை குறியீடு மற்றும் ஊர் பெயர் பலகை பொருத்தப்பட்ட கம்பங்கள், தொலைபேசி கம்பங்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us