sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளியில் இடமின்றி மாணவியர் அவதி வாசலில் அமர்ந்து பெற்றோர் போராட்டம்

/

பள்ளியில் இடமின்றி மாணவியர் அவதி வாசலில் அமர்ந்து பெற்றோர் போராட்டம்

பள்ளியில் இடமின்றி மாணவியர் அவதி வாசலில் அமர்ந்து பெற்றோர் போராட்டம்

பள்ளியில் இடமின்றி மாணவியர் அவதி வாசலில் அமர்ந்து பெற்றோர் போராட்டம்


ADDED : ஆக 09, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே சேக்குப்பேட்டை கவரை தெருவில், ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.

அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக, இப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி, வெளியேறாமல் இருப்பதால், மாணவியர் வகுப்பறை வரை செல்ல சிரமம் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்றினாலும், தண்ணீர் முழுதுமாக வெளியேறுவதில்லை.

மேலும், பள்ளி வளாகத்திலேயே, பள்ளியின் கட்டடத்தில், மாவட்ட கல்வி அலுவலகம் இயங்குகிறது. இதனால், வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டு, ஒரே வகுப்பறையில் இடமின்றி, தரையில் அமர வேண்டியள்ளது.

இந்நிலையில், பெற்றோர் சிலர், பள்ளி வாசலில் நேற்று அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் நேரில் வந்து பெற்றோரிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, வரும் 15ம் தேதிக்குள், மாவட்ட கல்வி அலுவலகத்தை காலி செய்வதாக கூறியதை தொடர்ந்து, பெற்றோர் கலைந்துசென்றனர்.






      Dinamalar
      Follow us