/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மெட்ரோ ரயில் திட்டத்தை காஞ்சி வரை நீட்டிக்க மனு
/
மெட்ரோ ரயில் திட்டத்தை காஞ்சி வரை நீட்டிக்க மனு
ADDED : ஆக 12, 2024 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : பரந்துார் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை, காஞ்சிபுரம் வரை நீடிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்வேல், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
மனு விபரம்:
சென்னையில் இருந்து பரந்துார் விமான நிலையத்திற்கு என, மெட்ரோ ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்தப் போவதாக அறிகிறோம். அண்ணாதுரை பிறந்த நாளான செப்., 15ம் தேதி அன்று, காஞ்சிபுரம் வரை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பை, தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

