ADDED : மே 30, 2024 12:12 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் வெள்ளைகுளம் கங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறும் ஜாத்திரை, கடந்த 26ம் தேதி, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், இரவு 8:00 மணிக்கு கங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 27ம் தேதி, காலை 8:00 மணிக்கு பால்குடம் ஊர்வலமும், இரவு 9:00 மணிக்கு பம்பை, உடுக்கை குழுவினருடன் சிரசு ஊர்வலம், கரகாட்டம், நையாண்டி மேளம், சிலம்பாட்டம் பக்கவாத்தியங்களுடன் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலாவும், நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், இரவு 8:00 மணிக்கு அம்பாள் புறப்பாடும் நடந்தது.
ஜாத்திரை நிறைவு நாளான நேற்று காலை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 9:00 மணிக்கு நாடகமும் நடந்தது.