sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

/

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 22, 2024 12:56 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:விதைகள் தன்னார்வ அமைப்பு, பாலாறு லயன் சங்கம், திரிவேணி அகாடமி பள்ளி, ஆதி கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், காஞ்சி 360 தன்னார்வ அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் பயன்பாடு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபாதில் நேற்று நடந்தது.

பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணியை, வாலாஜாபாத் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சங்கர், பாலாறு லயன் சங்கம் தலைவர் அரிகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

முக்கிய வீதி வழியாக சென்ற பேரணி, பழைய போலீஸ் நிலையம் அருகில் நிறைவு பெற்றது.

பேரணியில் பங்கேற்றவர்கள், 'பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம். பிளாஸ்டிக் எரித்தால் காற்று மாசடையும், மண்ணை காப்போம் உள்ளிட்டவை இடம்பெற்ற பதாகையை ஏந்தி, மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us