sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

9வது மாடியில் இருந்து தவறி விழுந்த பிளம்பர் பலி

/

9வது மாடியில் இருந்து தவறி விழுந்த பிளம்பர் பலி

9வது மாடியில் இருந்து தவறி விழுந்த பிளம்பர் பலி

9வது மாடியில் இருந்து தவறி விழுந்த பிளம்பர் பலி


ADDED : ஜூலை 16, 2024 01:06 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் அருகே, தொழிலாளர் தங்கும் விடுதியின் கட்டுமான பணியின் போது, 9வது மாடியில் இருந்து தவறி விழுந்த பிளம்பர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், குண்ணவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; பிளம்பர். இவர், ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் சிப்காட் நிறுவனத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் தொழிலாளர் தங்கும் விடுதியில் பிளம்பராக வேலை செய்து வந்தார்.

வழக்கம் போல, நேற்று காலை, 9வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த மணிகண்டன், எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியே, தவறி விழுந்தார்.

இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரகடம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மொபைல் போன் பேசியபடி வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்ததாகதெரிய வந்தது.






      Dinamalar
      Follow us