/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலை வளைவில் பள்ளம்
/
மண் அரிப்பால் சாலை வளைவில் பள்ளம்
ADDED : ஜூலை 14, 2024 12:05 AM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெரு கிழக்குப் பகுதியில், வி.என்.பெருமாள் தெருவுடன் இணையும் இடத்தில், சாலையோரம் மழைநீர் கால்வாய் உள்ளது.
சில ஆண்டுகளாக, இக்கால்வாயில் சென்ற மழைநீரால் சிறுபாலத்தை ஒட்டியுள்ள சாலையோர வளைவுப் பகுதியில், மண் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், திருவள்ளுவர் தெருவில் இருந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வி.என்.பெருமாள் தெருவில், இடதுபக்கம் சாலை வளைவில் திரும்பும்போதும், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போதும் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், வி.என்.பெருமாள் தெருவில், மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.