ADDED : ஆக 30, 2024 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 58 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. அதேபோல், விச்சூர் ஊராட்சி, மாம்பாக்கத்தில் இயங்கும் அரசு நிதி உதவிபெறும் அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் 64 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சைக்கிள்கள் வழங்கினார். சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.