/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜெயலலிதா பிறந்த நாள் படப்பையில் பொதுக்கூட்டம்
/
ஜெயலலிதா பிறந்த நாள் படப்பையில் பொதுக்கூட்டம்
ADDED : மார் 04, 2025 01:10 AM

படப்பை,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில், குன்றத்துார் ஒன்றியம், படப்பையில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், குன்றத்துார் ஒன்றிய செயலருமான கே.பழனி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வி.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, கழக அமைப்பு செயலர் கோ.அரி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதைதொடர்ந்து, 300 பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட துணை செயலர்கள் எஸ்.செந்தில்ராஜன், எஸ்.எம்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பிரதிநிதி படப்பை ஆர்.மாரி நன்றியுரை வழங்கினார்.