sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று புஷ்ப பல்லக்கு உற்சவம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று புஷ்ப பல்லக்கு உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று புஷ்ப பல்லக்கு உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று புஷ்ப பல்லக்கு உற்சவம்


ADDED : மே 31, 2024 03:33 PM

Google News

ADDED : மே 31, 2024 03:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடந்த உற்சவத்தில், வரதராஜ பெருமாள் தினமும் காலை மற்றும் மாலை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

இதில், பிரபல உற்சவமான கருடசேவை உற்சவம், கடந்த மாதம் 22ம் தேதியும், தேரோட்டம் மே 26ம் தேதியும், தீர்த்தவாரி உற்சவம் 28ம் தேதியும் நடந்தது. கடந்த மாதம் 29ம் தேதி இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் கொடி இறக்கப்பட்டு, வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

தொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இரு நாட்களாக பெருமாள் திருவடி கோவில் புறப்பாடு நடந்தது.

காலை 11:00 மணிக்கு, நுாற்றுகால் மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடந்தது. விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான இன்று இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.

இதில், பல வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், சன்னிதி தெரு, குறுக்கு தெரு, அண்ணா தெரு, நான்கு மாட வீதி, ஆணை கட்டி தெரு வழியாக வீதியுலா சென்று மீண்டும் சன்னிதி வந்தடைகிறார்.






      Dinamalar
      Follow us