/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராஜஸ்தான் ஜைன துறவியர் காஞ்சியில் விஜயேந்திரருடன் சந்திப்பு
/
ராஜஸ்தான் ஜைன துறவியர் காஞ்சியில் விஜயேந்திரருடன் சந்திப்பு
ராஜஸ்தான் ஜைன துறவியர் காஞ்சியில் விஜயேந்திரருடன் சந்திப்பு
ராஜஸ்தான் ஜைன துறவியர் காஞ்சியில் விஜயேந்திரருடன் சந்திப்பு
ADDED : ஏப் 03, 2024 12:17 AM

காஞ்சிபுரம்,ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜைன துறவியர் கவேஷ்ணாஜி, மேரு பிரபாஜி, தஷபிரபாஜி, மயங்க் பிரபாஜி உள்ளிட்ட நான்கு பெண் துறவியர் நேற்று காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்தனர். காஞ்சி காமகோடி பீடம், பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து உரையாடினர்.
இதில், ஹிந்து மதத்தினரும், ஜைன மதத்தினரும் இணைந்து மரக்கன்றுகள் நடுதல், மக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்தல், சைவ உணவின் நன்மைகளை எடுத்துக் கூறுதல், பசுக்களை பாதுகாத்தல், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை தொடர்பாக இணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடினர்.
இந்தியா முழுதும் 705 ஜெயின் துறவியர் இது குறித்து பிரசாரம் செய்து வருவதாகவும், துறவியர் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:
இன்றைய நிலையில் பக்தியோடும், இயற்கையோடும் இணைந்த கல்வி மிக அவசியமாகிறது.
பக்தியோடு கலந்த கல்வியை கற்றுத் தரும்போது குடும்ப மண முறிவுகள் ஏற்படாது.
இளைஞர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு செல்ல மாட்டார்கள். பயங்கரவாதம் மறைந்து சகோதரத்துவம் வளரும். முக்கியமாக இளைஞர்களின் எதிர்காலம் நன்றாகி, சிறந்த தேசம் உருவாகும். எனவே பக்தியோடு இணைந்த கல்வியால் மட்டுமே மனிதர்களை புனிதர்களாக மாற்றலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துரையாடலின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஜைன சங்க நிர்வாகிகள் மோகன்லால், இந்தர்ஜித், கிஷோர்குமார், ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

