sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 93 மனுக்கள் மீது உடனடி தீர்வு

/

ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 93 மனுக்கள் மீது உடனடி தீர்வு

ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 93 மனுக்கள் மீது உடனடி தீர்வு

ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 93 மனுக்கள் மீது உடனடி தீர்வு


ADDED : செப் 14, 2024 07:45 PM

Google News

ADDED : செப் 14, 2024 07:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொது வினியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, செப்., மாதத்திற்கான பொது வினியோக குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் தாலுகாவில் ஊவேரி கிராமம், உத்திரமேரூரில் புலிவாய், வாலாஜாபாதில் அகரம், ஸ்ரீபெரும்புதுாரில் கப்பாங்கோட்டூர், குன்றத்துாரில் வழுதலம்பேடு என, ஐந்து தாலுகாவிலும் பொது வினியோக குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், அனைத்து தாலுகாவிலும் நடந்த குறைதீர் கூட்டத்தில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் உள்ளிட்ட 110 மனுக்கள் வரப் பெற்றன. இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 93 மனுக்கள் மீது குறைதீர் கூட்டத்திலேயே உடனடி தீர்வு காணப்பட்டது.

மீதமுள்ள 17 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us