/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான ஆர்.ஐ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றி புதியதாக கட்ட கோரிக்கை
/
சேதமான ஆர்.ஐ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றி புதியதாக கட்ட கோரிக்கை
சேதமான ஆர்.ஐ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றி புதியதாக கட்ட கோரிக்கை
சேதமான ஆர்.ஐ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றி புதியதாக கட்ட கோரிக்கை
ADDED : பிப் 28, 2025 12:43 AM

படப்பை:காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பெரியார் நகரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு முதியோர் உதவித்தொகை மற்றும் அரசின் பிற நலத்திட்டங்களின் கீழ் விண்ணபிக்கவும், சான்றிதழ்கள் சரிபார்கவும் ஏராளமான மக்கள் சென்று வந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு புயலின் போது மரக்கிளைகள் உடைந்து விழுந்ததில் இந்த கட்டடம் சேதமானது.
இதனால், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் படப்பை கங்கைஅம்மன் கோவில் அருகே உள்ள மகளிர் சுயஉதவி குழு கட்டடத்திற்கு, மாற்றப்பட்டது.
நான்கு ஆண்டுகளாகியும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சீரமைக்கப்படவில்லை. இதனால், மகளிர் சுய உதவி குழு கட்டடத்திலேயே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தற்போது வரை இயங்கி வருகிறது.
இதனால், மகளிர் குழுவினர் இந்த கட்டடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, படப்பை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி அங்கு புதிய கட்டடம் கட்டி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.