/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க கோரிக்கை
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : மார் 08, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விப்பேடு:காஞ்சிபுரம் ஒன்றியம், விப்பேடு ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக துார்வாரி பராமரிக்காததால், இக்கால்வாயில், கோரைபுற்கள், செடி, கொடிகள் வளர்ந்து கால்வாயில் நீர்வழித்தடம் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை பெய்தால், இக்கால்வாய் வாயிலயாக வெளியேற வேண்டிய மழைநீர், விவசாய நிலங்களை சூழ்ந்து பயிர்கள் நாசமடையும் நிலை உள்ளது. எனவே, மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.