sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஜாமினில் வந்த ரவுடி கிணற்றில் சடலமாக மீட்பு

/

ஜாமினில் வந்த ரவுடி கிணற்றில் சடலமாக மீட்பு

ஜாமினில் வந்த ரவுடி கிணற்றில் சடலமாக மீட்பு

ஜாமினில் வந்த ரவுடி கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : செப் 02, 2024 10:25 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை : படப்பை அடுத்த, ஆதனுார் பிரதான சாலை, மகாலட்சுமி நகரில் சாலையோர கிணற்றில், இறந்த நிலையில் ஆண் சடலம் மிதந்தது.

மணிமங்கலம் போலீசார், ஒரகடம் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், இறந்தவர் ஆதனுார் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ரவுடி தனசேகர், 27, என்பது தெரிய வந்தது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட தன சேகர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். நான்கு மாதங்களுக்கு முன் ஜாமின் பெற்று வெளியே வந்தார்.

முன்பகை காரணமாக தனசேகர் கொலை செய்யப்பட்டு உடலை கிணற்றில் வீசினாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என, போலீசார்விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us