sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சாலை விரிவாக்க பணியாளர்கள்

/

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சாலை விரிவாக்க பணியாளர்கள்

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சாலை விரிவாக்க பணியாளர்கள்

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சாலை விரிவாக்க பணியாளர்கள்


ADDED : மே 03, 2024 10:53 PM

Google News

ADDED : மே 03, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இரு வழிச்சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் வரை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர, தார் அமைக்காத சாலையோரம் எம்.சாண்ட் கொட்டி, பேவர் பிளாக் கற்களை அடுக்கி சாலையின் இருபுறமும் அழகுபடுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையோரம், 10,200 மரக்கன்றுகளை பெரியகரும்பூர், செம்பரம்பாக்கம், ஊவேரி, வெள்ளைகேட்- சித்தேரி தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோரத்தில் மரச்செடிகள் நடப்பட்டுள்ளன.

கோடைக்காலத்தில், செடிகள் கருகிவிடக் கூடாது என, காலை மற்றும் மாலை நேரங்களில், டிராக்டர்கள் வாயிலாக தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

இதன் மூலமாக, செடிகள் பசுமையாக இருக்கிறது என, சாலை விரிவாக்க பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us