ADDED : மே 29, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, : மண்ணடியைச் சேர்ந்தவர் முஸ்தான் அஜிஸ், 27. இவர், எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு, முதுநிலை படிப்பில் சேர படித்து வருகிறார்.
'மணி பேக்' என்ற 'ஆன்லைன்' செயலியில் பணம் செலுத்தினால், இரு மடங்கு பணம் கிடைக்கும் என, இவரது நண்பர்கள் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளனர்.
இதை நம்பி அந்த செயலியில், 5 தவணைகளில், 1.27 லட்சம் ரூபாயை, 'ஆன்லைன்' வாயிலாக பணப்பரிமாற்றம் செய்துள்ளார். பின், அவர்களின் மொபைல்போன் எண்ைண தொடர்பு கொள்ள முடியவில்லை. வடக்கு கடற்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.