sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மகளிர் குழுவினருக்கு ரூ.178 கோடி கடன் உதவி; காஞ்சியில் அமைச்சர் அன்பரசன் தகவல்

/

மகளிர் குழுவினருக்கு ரூ.178 கோடி கடன் உதவி; காஞ்சியில் அமைச்சர் அன்பரசன் தகவல்

மகளிர் குழுவினருக்கு ரூ.178 கோடி கடன் உதவி; காஞ்சியில் அமைச்சர் அன்பரசன் தகவல்

மகளிர் குழுவினருக்கு ரூ.178 கோடி கடன் உதவி; காஞ்சியில் அமைச்சர் அன்பரசன் தகவல்


ADDED : செப் 09, 2024 11:31 PM

Google News

ADDED : செப் 09, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : தமிழகம் முழுதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, வங்கி கடனுதவிகளை, அமைச்சர் உதயநிதி, மதுரையில் நேற்று துவக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, வங்கி கடனுதவிகளை வழங்கினார்.

நகை கடன் தள்ளுபடி


இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

ஊரக, நகர்ப்புற பகுதிகளில் வாழ்வோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுகிறது.

இத்திட்டத்தில், பெண்களை ஒன்றிணைத்து சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல், பண்ணை சாரா தொழில்களுக்கு கடனுதவி வழங்கல், உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 58 கோடி ரூபாய்க்கு, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,451 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய, 37.3 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால், 18,090 பெண்கள் பயனடைந்துள்ளனர்.

அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13,515 விவசாயிகள் வாங்கிய 89.4 கோடி ரூபாய் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 7,392 மகளிர் சுயஉதவிக் குழுக்களிலும், நகர்ப்புறத்தில் 9,374 சுயஉதவிக் குழுக்களிலும் 1.12 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடனுதவி


மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 535 கோடி ரூபாய் நடப்பாண்டு கடனுதவி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 178 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி.,செல்வம், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதுார் சப் - -கலெக்டர் அஷப்அலி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us