sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

/

இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு


ADDED : ஜூலை 26, 2024 02:13 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்பக்கம் உள்ள ரெட்டிப்பேட்டை தெரு, தும்பவனம் அருணாசலம் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில், கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

இந்நிலையில், இரு நாட்களாக கோழி இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீர் சிவப்பு நிறத்தில் சாலையில் வழிந்தோடியதால், அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். கழிவுநீரில் நடந்து சென்று பழகிய மக்கள், இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீரில் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்கக்கோரி, மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்தும் சாலை மறியல் செய்து, போலீசாரால் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைபட்டு கிடந்தோம்.

இருப்பினும் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தவில்லை. இதேநிலை நீடித்தால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பல்வேறு தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது.

எனவே, ரெட்டிப்பேட்டை தெரு, தும்பவனம் அருணாசலம் தெருவில் உள்ள அனைத்து 'மேன்ஹோல்'களிலும், அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us