sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் வழியும் கழிவுநீரால் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

/

சாலையில் வழியும் கழிவுநீரால் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாலையில் வழியும் கழிவுநீரால் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாலையில் வழியும் கழிவுநீரால் காஞ்சியில் சுகாதார சீர்கேடு


ADDED : ஜூலை 07, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 24வது வார்டு கே.எம்.வி., நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகளும், ரேஷன் கடை, அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா, தனியார் பள்ளி, கோவில் போன்றவை உள்ளதால், வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.

இங்குள்ள பிரதான சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக 'மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

இதனால், இச்சாலையில் செல்லும் பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

வேகமாக செல்லும் வாகனங்களால் நடந்து செல்வோரின் ஆடைகளில் கழிவுநீர் தெளிக்கிறது. துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால், கே.எம்.வி., நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கே.எம்.வி., நகர்வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us