/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
‛'லேப்டாப்' திருடிய செக்யூரிட்டி கைது
/
‛'லேப்டாப்' திருடிய செக்யூரிட்டி கைது
ADDED : ஜூன் 26, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேலை செய்து வருபவர் மஞ்சுநாத், 43.
நேற்று முன்தினம், தொழிற்சாலையில், தன் அறையில் இருந்த 'லேப்டாப்'பை காணவில்லை என, ஒரகடம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அதே தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரியும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர் உராங்க், 32, என்பவர், 'லேப்டாப்'பை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.