sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செக்யூரிட்டி பணியிடம் காலி விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு கேள்விக்குறி

/

செக்யூரிட்டி பணியிடம் காலி விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு கேள்விக்குறி

செக்யூரிட்டி பணியிடம் காலி விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு கேள்விக்குறி

செக்யூரிட்டி பணியிடம் காலி விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு கேள்விக்குறி


ADDED : மே 01, 2024 12:45 AM

Google News

ADDED : மே 01, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு காலை, மாலையில், ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி கல்லுாரி மாணவ- - மாணவியர் தடகளம், ஜூடோ, இறகுபந்து, டென்னிஸ், வாள்வீச்சு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பயிற்சி பெற தினமும் நுாற்றுகணக்கானோர் வந்து செல்கின்றனர்.

மாணவ- - மாணவியர் அதிகளவு வந்து செல்லும் மாவட்ட விளையாட்டு அரங்கில், இரவு நேர செக்யூரிட்டி மட்டுமே பணியில் உள்ளார்.

ஆனால், பகல் நேர செக்யூரிட்டி பணியிடம் காலியாக உள்ளதால், விளையாட்டு அரங்கிற்குள் விளையாட்டு வீரர், வீராங்கனையர் தவிர வெளிநபர்களும் மாவட்ட அரங்கத்திற்குள் அத்துமீறி நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சூழல் உள்ளது.

மேலும், மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு பல்வேறு பயிற்சிக்காக வந்து செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவியர், வீராங்கனையரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு, பகல் நேர செக்யூரிட்டி நியமிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us